883 கிளி ஜோசியம் பார்த்தேன்

இந்த பாட்டை கேட்டு பாருங்க.. வித்தியாசமான பாடல் படங்களில் தான் இருக்கும் ரேடியோவில் கேட்பது மிக மிக அபூர்வம் ஏனென்றால் பாடல் அப்படி.. அப்படிப்பட்டது. இது போல முன்னமேயே இதே தளத்தில் இப்படி பட்ட பாடலை தளத்தின் சொந்தக்காரர் வற்றாயிருப்பு சுந்தர் சார் பதிந்திருக்கிறார் டாக்ஸி டாக்ஸி(இந்த பதிவில் உள்ள பாடலை கேட்பீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது தவறாம இணைய நண்பர்களின் பின்னூட்டஙக்ளை அவசியம் நீங்க படிக்கிறீங்க.. படிக்கீறீங்க.)என்று தொடங்கும் பாடல். அந்த பாடலில் இந்த பாடலுக்கு அப்படியே எதிர்மறை இதில் சித்ரா மேடம் பாடுவாங்க அதில் பாலுஜி பாடுவார். இந்த இடத்தில் அதை நினைவுக்கூறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் இது போல் எப்போதாவது தான் அமையும் அப்படி தானே சுந்தர் சார்?) அந்த படத்தையும் இந்த படத்தையும் நான் பார்த்ததில்லை ஆகையால் காட்சிகளை விவரிக்க முடியவில்லை. சரியாப்போச்சு இந்த கர்மத்துக்கு விளக்கம் வேற தேவையான்னு அம்மணிகள் பொலம்புவது கேட்கிறது கேட்கிறது. பாட்டில் பாலுஜி தாவு கழண்டுவிடுகிறது. அமர்க்களம் போங்கள்.. கேட்டு மகிழுங்கள்.

ஒலிக்கோப்பு வழங்கி இந்த விருப்பப்பாடலை விரும்பி கேட்டவர் கோவை கோபலகிருஷ்னன் சார். அவருக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.

படம்:பேண்டு மாஸ்டர்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி,சித்ரா.
நடிகர்கள்:சரத்குமார், ரஞ்சிதா (அட இதுலயும் இருக்காங்களே!)

Get this widget | Track details | eSnips Social DNA

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா

போச்சுடா…
ஏய்..ஏய்.. ஏய் இப்ப சொல்லிட்டேன்
கிட்ட வராத அடிப்பேன்..ஹ..
அய்ய… ஆள உட்ரீஈஈஈ

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா

இப்ப என்னாங்கற?

நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

இன்னிக்கி அம்மாவாசை..

என் வாசலில் வைத்த பூசணி பூவும் நீ தானய்யா

மாடு மேயும்..

என் ராசா ராசா
ஜோசியம் பார்த்தேன்

ம்ம்

அந்த மதுரை மீனாட்சி திருகல்யாண சீட்டு வந்ததய்யா

ச்சே ஆள வுடு

தேக்குமர உடம்பு என்ன படுத்துது படுத்துது பாடா படுத்துது
நாக்கு வர வேர்த்து மனம் கொதிக்குது கொதிக்குது சூடா கொதிக்குது
சிக்குமுக்கு சிக்குமுக்கு சிக்குமுக்கு

இவங்க வேறய்யா..

அச்சோ தேக்குமர உடம்பு என்ன படுத்துது படுத்துது பாடா படுத்துது

வேண்டா..

நாக்கு வர வேர்த்து மனம் கொதிக்குது கொதிக்குது சூடா கொதிக்குது

ஐஸ் வெச்சுக்கோ..

போதை ஒன்னு ஏறுது ஏறுது கைகளும் தாவுது மாமனை நினைக்கயிலே

பேசாமே தூங்குடி..

சின்னப் பொண்னு சீறுது சீறுது தாகத்தில் தூங்குது நீயும் அணைக்கலையே

ச்சீ..

ஆசை அடங்கலையே

ஏய்..ஏய்..

என் மாமன் மடங்கலையே

ச்சீ.. உட்றீ

சோப்பு கறையிலையே என் சோக்கு புரியலையே

அதெல்லாம் புரியுது

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா
நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

ச்ச்சசசச…சூசூசூ..சிச்சீசீ.. சேச்சே…

வெவ்வ்வ்வ்வ்வெவேஏஏஏ

மூக்கு முனை சிவந்து உடல் முறுக்குது முறுக்குது மூடா இருக்குது
நாத்து நடும் வயலு அத உழுகல உழுகல காடா கிடக்குது

சே..மூக்கு முனை சிவந்து உடல் முறுக்குது முறுக்குது மூடா இருக்குது

முருகா..

நாத்து நடும் வயலு அத உழுகல உழுகல காடா கிடக்குது

சாமியேய்..

வேப்பெண்ணையை தடவுறேன் தடவுறேன்
காலையும் தோளையும் அமுக்கி புடிக்கறேன்ய்யா..

மஸாஜ் பன்றய்யா..

மாப்பிள்ளைக்கு சுடுதண்ணி போடுறேன்
மதமதப்பாக சுழுக்கு எடுக்கறன்ய்யா

சேலை வழுக்குதய்யா அதில் சேதி இருக்குதய்யா

ஆசை பொறக்கலைய்யா இந்த பூவு புடிக்கலைய்யா

கிளி ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா
நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

என் வாசலில் வைத்த பூசணி பூவும் நீ தானய்யா
என் ராசா ராசா
ஜோசியம் பார்த்தேன் அந்த மதுரை மீனாட்சி
திருகல்யாண சீட்டு வந்ததய்யா

கோபம் வருது அடிச்சன்னா பல்லு முப்பத்திரண்டும் உடைஞ்சிடும்
கிட்ட வராதே..கிட்ட வராதே..
நல்ல தேதியை கேட்டேன் அது நாளூ பூராவும்
போடி வெளியே போறீயா..இல்லையா
பௌர்னமி என்று சேதி சொன்னதய்யா

சரிதான்..போடி…

One Response to “883 கிளி ஜோசியம் பார்த்தேன்”

  1. V. Gopalakrishnan Says:

    Dear Ravee Sir,Romba varudangalukku piragu "Yei Taxi Taxi" paattai ketkirein. Arpudhamaaga paadiyullaar.Enna oru uchcharippu. Padhivukku mikka nandri.Anbudan,V. Gopalakrishnan.

Leave a comment